Tuesday, March 31, 2026

‘தமிழகத்தில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 comments

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 17; திருப்பத்துார் தானியங்கி வானிலை நிலையம், வடபுதுப்பத்து, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா, 16; திருப்பத்துார் வாணியம்பாடி, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், செப். 25 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும. சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00