அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 17; திருப்பத்துார் தானியங்கி வானிலை நிலையம், வடபுதுப்பத்து, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா, 16; திருப்பத்துார் வாணியம்பாடி, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், செப். 25 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும. சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிழக அரசியலின் மறுசீரமைப்பு 𝟮𝟬𝟮𝟲 — 𝟮𝟬𝟯𝟭 சீமான் • நாம் தமிழர் கட்சி (NTK) • விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK)
- திலீபன் அவர்களதும், சங்கர் அவர்களதும் நினைவேந்தல் நிகழ்வு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெல்சியம்.
- சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமான நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்துள்ளது.
- தேவைப்பட்டால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பைக் கோரலாம் என்று இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
- முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 17ஆம் ஆண்டு நினைவு நாள் – லண்டன்