மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (21.09.2025) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சனிக்கிழமை (20.09.2025) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.
- உலக ஒழுங்கின் மறுசீரமைப்பா? புதினின் எச்சரிக்கைகள், உக்ரைன் போர், ஸ்டார்மரின் ராஜினாமா மற்றும் ஐரோப்பாவின் அரசியல் நிலநடுக்கம்
- அகவை வாழ்த்து – ஜனவரி 25
- பச்சைப் புல்மோட்டை ஆனந்தபுரத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் அஞ்சலி
- கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் – முல்லைத்தீவு
- டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகளை இடைவிடாமல் பின்தொடர்வதாக அமித் ஷா சபதம் செய்கிறார்: “நரகத்தில் இருந்தாலும் சரி, அவர்களை வேட்டையாடுவோம்”
- சாம்சங் அறிமுகப்படுத்திய புதிய முப்படிநிலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் (Galaxy Z TriFold)







