மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (21.09.2025) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சனிக்கிழமை (20.09.2025) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.
- சந்தியில் நேட்டோ (NATO): ஐரோப்பாவின் எழுச்சி, அமெரிக்காவின் திசைமாற்றம் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பின் மறுவடிவம்
- லெப்.கேணல் தமிழ்மாறன்
- நினைவு வணக்கம் – நவம்பர் 10
- லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா) | 24.09.2005
- தமிழகத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்துள்ளன.
- தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்தும் “அடிக்கல் நாயகர்கள் – நினைவு வெற்றித் கிண்ணம் 2026” ஐக்கிய இராச்சியம்.







