‘மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும், 5 சதவீத வரியின் கீழ் குறைந்த விலைக்கு, வரும் 22ம் தேதி முதல் வாங்கிக் கொள்ளலாம்,’ என, இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது: மக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும், தற்போது, 5 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில், மீண்டும் புதிய விலையை ஒட்டுவது இயலாத காரியம். அந்த மருந்துகளை, புதிய வரி விதிப்பின்படி குறைந்த விலையில், மக்களுக்கு வழங்க முடியும்.
அதனை எவ்வாறு செயல்படுத்துவது, ஏற்கெனவே உள்ள வரி நடைமுறையில், கொள்முதல் செய்த மருந்துகளை, குறைந்த விலையில் விற்றால் ஏற்படும் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்வேறு அறிவுறுத்தல்களும், பரிந்துரைகளும், மருந்து விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே, மக்களுக்கு வரும் 22ம் தேதி முதல் வரிச் சலுகை பலன்கள் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது. இருப்பில் உள்ள மருந்துகளை வாங்கினாலும், அதனை 5 சதவீத வரியின் கீழ் வழங்குமாறு, வாடிக்கையாளர்கள் உரிமையுடன் கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- பிரான்சிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்வமாக உள்ளது.
- இரங்கல் செய்தி – ஜெயந்தன் இராமச்சந்திரன்
- செம்மணி சித்துபதி மனித புதைகுழியில் அடுத்த அகழ்வாராய்ச்சிக்கான பட்ஜெட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகளை இடைவிடாமல் பின்தொடர்வதாக அமித் ஷா சபதம் செய்கிறார்: “நரகத்தில் இருந்தாலும் சரி, அவர்களை வேட்டையாடுவோம்”
- உலகின் முதல் AI அமைச்சரை அல்பேனிய அரசாங்கம் நியமித்துள்ளது.
- இரட்டை ஜ்வாலைகள் ஒளிர, மிலான்–கோர்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் விழா பிரம்மாண்டமாக தொடக்கம்