Thursday, April 2, 2026

தங்காலை கடலில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments

தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

இவர் நண்பர்களுடன் இணைந்து படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையில் படகிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00