புத்தளம் பகுதியில் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள மீன்பிடி குடிசையில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை குடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர், மீன்பிடி குடிசையில் மற்றொரு நபரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!