ஊழியர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கா 3,300 விமானங்களை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில்: நிதி மசோதா முட்டுக்கட்டை காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசிய அரசு துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன. இதற்கு விமான சேவைகள் பிரிவும் விதிவிலக்கல்ல.

அத்தியாவசிய பணியாளர்களாக கருதப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் உட்பட 13,000 பேர், கடந்த அக்., 1ம் தேதி முதல், ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஊதியம் இல்லாததாலும், அதிக பணிச்சுமையாலும் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. சிலர் தங்கள் பணியை ராஜினாமாவும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறையால், நேற்று முன்தினம் 3,300க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10,000 விமானங்களின் சேவைகள் தாமதமாயின. இதற்கு முந்தைய இரு நாட்களும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கை, நேட்டோவின் பிளவுகள் மற்றும் டிரம்பின் புதிய புவிசார் அரசியல் அதிர்வுகள்

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து; கச்சா எண்ணெய் விலையில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் சரிவு.