Wednesday, April 1, 2026

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள், ஊடக அடக்குமுறைகளுக்கு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்.

0 comments

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சனிக்கிழமை (22.11.2025) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில், பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,

கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்தியமைக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00