திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22.11.2025) காலை இடம்பெற்றது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்களோடு,மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
- காசாவுக்காக கண்ணீர் வடிக்கும் திராவிட மாடல் 2.0 மானுட பற்றாளர்கள் வாழ்க! வாழ்க!
- பாஜக அடுத்த அரசியல் எல்லையாக தமிழ்நாட்டை நோக்குகிறது என்கிறார் நாகேந்திரன்
- ஆழ்கடல் ரோந்துக் கப்பலான “கரோஐசால்” வழிமறிக்கப்பட்டு 17.09.2006 அன்று நடைபெற்ற சண்டை
- கிளிநொச்சியின் பள்ளிகுடா பகுதியில் 2000 கடல் அட்டைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
- நினைவு வணக்கம் | டிசம்பர் 04
- இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையின் நான்காவது மாடி சித்திரவதை முகாம்!

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அடுத்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.