இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸின் தென் ஆப்ரிக்க அணி, 489 ரன்கள் சேர்த்தது.

அதனையடுத்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் தென் ஆப்ரிக்க அணியின் புவுலர்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்ரிக்க பவுலர் மார்கோ ஜேன்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, 288 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
3வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 2வது இன்னிங்ஸில் 26 ரன்கள் சேர்த்து, 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- இந்திய மக்களவையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அனுராக் தாக்கூர் எழுப்பினார்: தமிழக தி.மு.க. எதிர்ப்பு
- இந்திய ராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம். – இந்திய பிரதமர் அழைப்பு
- மருத்துவமனைகள் சேவைகள் மற்றும் கட்டணங்களை வரவேற்புப் பகுதியில் தெளிவான முறையில் இடுகையிட வேண்டும். – கேரள உயர் நீதிமன்றம்.
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியது; உச்சி மாநாட்டுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும்
- யமால் கோல்; அல்பாசெட்டையை வீழ்த்தி கோப்பா டெல் ரே அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா
- வங்கி மோசடி: உரிய அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று தொழிலதிபர் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.