Wednesday, April 1, 2026

கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது

0 comments

கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04-01-2026) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 51 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00