Wednesday, April 1, 2026

அஹங்கம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலி

0 comments

அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் நீண்ட நேர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00