Friday, April 3, 2026

வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது; பிப்ரவரி 21-22 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

0 comments

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும்.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10 மாவட்டங்கள்: பிப்ரவரி 21ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி

* தென்காசி

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* மயிலாடுதுறை

3 மாவட்டங்கள் : பிப்ரவரி 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தென்காசி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00