தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரும்.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21, 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மாவட்டங்கள்: பிப்ரவரி 21ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி
* தென்காசி
* தூத்துக்குடி
* ராமநாதபுரம்
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* மயிலாடுதுறை
3 மாவட்டங்கள் : பிப்ரவரி 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு அழித்துவிட்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது.
- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது!
- ‘பள்ளி மாணவர்கள் நாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கக்கூடாது’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
- மாத்தூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடல்
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.