கடந்த செப்., 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதை, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
கரூரில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆட்கள் கொள்ளளவு குறித்து, துல்லியமாக அளவீடு செய்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம், கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர்.
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கைதி ஏந்திய சிறை வாகனக் காவல் படையின்மீது நாட்டுக் குண்டு தாக்குதல் — கைதி தப்பி ஓட்டம்!
- வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், வாக்காளர் சேவைகளை விரிவுபடுத்தும் தேர்தல் ஆணையம்
- எரிபொருள் தட்டுப்பாட்டால் காசாவில் உயிருக்கு ஆபத்தான நிலை: மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை!
- இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!
- மே 18 முள்ளிவாய்க்கால் 17’ம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும் – பிரான்ஸ்
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.