கடந்த செப்., 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதை, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
கரூரில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆட்கள் கொள்ளளவு குறித்து, துல்லியமாக அளவீடு செய்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம், கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர்.
- The Lamp of Non-Violence – Thileepan’s memory
- தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஜெனிவாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடக்கம்
- தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
- தமிழர் தனிநாடு: ஆதித்தனாரின் ‘தமிழப் பேரரசு’ – ஒரு வரலாற்று ஆய்வு
- உக்ரைனின் ஓஷாட்பாங்க் சொத்துக்கள் ஹங்கேரியில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில், உக்ரைன் அதிகாரிகள் எவ்வாறு தடுத்து விசாரிக்கப்பட்டார்கள் என்ற புதிய தகவல்கள் வெளிச்சம்
- ஐரோப்பிய ஒன்றிய இராணுவங்களை ‘தீவிரவாத அமைப்புகள்’ என ஈரான் வகைப்படுத்தியது — பதிலடி நடவடிக்கை தீவிரம்
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.