வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை உருவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதிகளில், நேற்று காலை நிலவரப்படி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர் மற்றும் வங்கதேச கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். தமிழகம், புதுச்சேரியில் வரும், 8ம் தேதி வரை லேசான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னையில் தொடரும் மழை
- “சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்.” – தமிழகத் தலைவர்களிடம் நேரடியாக வலியுறுத்தவுள்ள தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள்.
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரனின் விலை தற்போது ரூ.85,000க்கு மேல் உள்ளது.
- இந்த முறை ஒரு வலுவான கூட்டணி உருவாகியுள்ளது, நாம் திமுகவை தோற்கடிக்க வேண்டும்.
- பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடல்
மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில், இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.