” தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது,” என ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

கோவையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில், ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது:
திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது. தி.மு.க.,வினர் திராவிடம், தமிழ் குறித்து பேசுகின்றனர். இவ்விரண்டுக்குமே தி.மு.க.,வினர் உண்மையாக இல்லை. தி.மு.க., தமிழை அழிக்க நினைக்கிறது; இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை.
தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்., ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியாவில் இருந்த தேசியத்தை மீட்டெடுத்தது பா.ஜ., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை. தி.மு.க.,வுக்கு தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
- காணொளி செய்திகள் – இணையத்தில் சீமான் வலிமையை என்ன ?
- பாலியல் தொழிலும் – விஜயின் அரசியலும் !
- “வேலையே செய்யாமல் சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால்” சஸ்பெண்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மீண்டும் பணியில் சேர்க்க முடிவு.
- வன்கொடுமை வழக்கு: காஞ்சி டிஎஸ்பி கைது, நீதிபதி அவரை காரில் சிறைக்கு அழைத்துச் சென்றதால் சர்ச்சை!
- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இளஞ்சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு “மகளிர் தின” வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.