தமிழீழமே நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி எழுச்சியுடன் பயணிக்கும் ஈருருளிப்பயணம் 9’ம் நாள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டைத் தொடர்ந்து லக்ஸ்சம்பூர்க்கில் அமைந்துள்ள  வெளிவிவகார அமைச்சில் மனு கையளித்ததை தொடர்ந்து ஈருருளிப் பயணமானது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றயை தினம் காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து பயணித்து Karlsruhe நகரபிதாவிற்கான  மனு கையளிப்பு இடம்பெற்றது  தொடர்ந்து நாளை காலை 9.00 மணிக்கு “France எல்லையை நோக்கி பயணிக்கும்

Related posts

சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கானவீரவணக்க நிகழ்வு 2026

இலங்கைத் தமிழர் தேசியக் கேள்வியின் தோற்றமும் வளர்ச்சியும் (1948–1976)

ஆனந்தபுர மாவீரர்களின் 17வது ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் நடைபெற்றது.