நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இலங்கையில் நீதியின் சீரழிவு

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை

மக்கள்வசிய அரசியலின் ஓர் விமர்சனம்: வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் அரசியலை அவிழ்த்துப் பார்ப்பது