நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் டைவிங் பிரிவு இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்று கூறி, தரம் குறைந்த கிரீம்களைத் தயாரித்து வந்த மாத்தளையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!