தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 17வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.

இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.

தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.

“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.