கடுவளை – வெலிவிட்ட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2026) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கடுவளை – வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

CEBயின் மின்சார விநியோக நடவடிக்கைகள் இப்போது EDL-க்கு மாற்றப்பட்டுள்ளன.

மாரவில கடற்பரப்பில் சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.