கடுவளை – வெலிவிட்ட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (08-03-2026) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கடுவளை – வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராமநாதன் அர்ச்சுனாவை பதவி நீக்கம் செய்தல்

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!