”உயர் நீதிமன்ற அனுமதியுடன், ‘தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு’ மாநாட்டை நடத்தியே தீருவோம்,” என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

முறையாக அனுமதி பெற்று, மாநாடு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாகக் கூறி, மாநாட்டுக்கு தி.மு.க., அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு, காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்த, காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

மாநாட்டிற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை; விறகு அடுப்புகளுக்கு மாறும் சூழ்நிலை!

சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.