இந்தியத் தூதர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி குறித்து பிரதிவேந்தருடன் கலந்துரையாடினார்.

இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07-04-2026) துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை சந்தித்தனர்.

இதன்போது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்ததாகவும் அது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உயிர்காக்க உதவிடுவோம்

கிழக்கின் நிழல் யுத்தம் கேணல் ரமணன்

ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்! – தேசியத் தலைவர்