நெடுந்தீவிலிருந்து கடலுக்குள் காணாமல் போன மீனவரின் உடல், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டுள்ளது!

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார்.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இன்று அவர் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Related posts

€2 டிரில்லியன் நீண்டகால பட்ஜெட் திட்டத்தைச் சுற்றி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கடும் விவாதங்களில் இறங்கினர்

தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கில் நில உரிமையாளர்கள் போராட்டம்

சிங்கள பேரினவாதத்தின் ஏவல் ஒழுக்கமற்ற தறுதலை ஒன்று குலைப்பதை பாருங்கள்!