நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்று (19-06-2026) வெள்ளிக்கிழமை நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இன்று அவர் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது