இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
உறவுமுறை மற்றும் நட்புறவு அடிப்படையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பு சுமுகமான சூழலில் இடம்பெற்றதுடன், இருதரப்பினருக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாகவும் அறியப்படுகிறது