அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

பிரித்தானியா

முப்பெரும் விழா 2025 – தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ் (Tnawales)

by Amizhthu 2 January 2026
written by Amizhthu

06.12.25 சனிக்கிழமை அன்று, முப்பெரும் விழா (ஒளிவிழா, மதிப்பளிப்பு விழா, ஆண்டு விழா) நிகழ்வு, குறித்த நேரத்துக்கு ஆரம்பமாகி மிகவு‌ம் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.

அன்றைய நிகழ்வின் அனைத்து பணிகளிலும் இணைந்த அனைவருக்கும் மனம் நிறைந்த மகிழ்வினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முகப்புத்தகம் ஊடான நேரஞ்சல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.

நிர்வாக நடுவம்.
தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ் (Tnawales)

தொடர்பு:
07771059400
tnawales2020@gmail.com

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
நிகழ்வுகள்

டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம் பெருமகிழ்வுடன் கொண்டாடும் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் திருநாள் 2026

by Amizhthu 2 January 2026
written by Amizhthu

“உழவர் சிறப்பை.. உலகிற்குக் கூறும்..
உழவர் திருநாளில்.. உள்ளம் மகிழ்ந்து..
உறவுகள் இனணந்து.. உற்சாகம் பொங்கிட..
உதிக்கும் கதிரவனை.. உளமாரத் துதித்திடுவோம்..
ஊர்கூடிப் பொங்கிட.. அனைவரும் வருகவென..
உள்ளக உவகையுடன் .. உங்களை அழைக்கின்றோம்..”

நாள்:
03 சுறவம் 2057 (திருவள்ளுவர் ஆண்டு)
17 சனவரி 2026 சனிக்கிழமை (ஆங்கில ஆண்டு)

நேரம்:
காலை 9:00 மணிக்கு ஆரம்பம்

இடம்:
Dipton Jubilee Centre
Front Street, Dipton, Stanley, DH9 9DR

தொடர்புக்கு:
0758 178 6138 | 0777 941 4950

ஊர்கூடிப் பொங்கி மகிழ்வோம்.. அனைவரும் வாருங்கள்..

டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம்

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஐரோப்பா

யூரோவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பல்கேரியா — யூரோ மண்டலத்தின் 21வது உறுப்பினராக புதிய அத்தியாயம்

by Amizhthu 2 January 2026
written by Amizhthu

பல்கேரியா இன்று அதிகாரப்பூர்வமாக யூரோவை தன் நாணயமாக ஏற்றுக்கொண்டு, யூரோ மண்டலத்தின் 21வது உறுப்பினராக இணைந்தது. இதன் மூலம், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) கணக்கீட்டின்படி, யூரோவை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 350 மில்லியனைத் தாண்டியுள்ளது.

2007ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததிலிருந்து, பல்கேரியா நீண்ட காலமாக எதிர்பார்த்த இந்த மாற்றம் அரசியல் விவாதங்களையும் பொதுமக்களின் கலவையான எதிர்வினைகளையும் சந்தித்தது. 2025ஆம் ஆண்டு, பல்கேரியா அனைத்து இணைவு அளவுகோல்களையும் பூர்த்தி செய்ததாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

இரட்டை நாணய மாற்றக் காலம்

அரசின் திட்டப்படி, ஜனவரி மாதம் முழுவதும் பல்கேரியன் லெவ் மற்றும் யூரோ இரண்டும் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படலாம். பிப்ரவரி 1 முதல், யூரோ மட்டுமே சட்டபூர்வ நாணயமாகும்.

மாற்றத்திற்கான முக்கிய ஏற்பாடுகள்:

  • பணம் பரிவர்த்தனைகள் ஜனவரியில் இரு நாணயங்களிலும் ஏற்கப்படும்; ஆனால் மீதிப் பணம் ஒரே நாணயத்தில் — முன்னுரிமையாக யூரோவில் — வழங்கப்பட வேண்டும்.
  • இலவச நாணய மாற்றம் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஜூன் 30 வரை கிடைக்கும்.
  • இரட்டை விலை காட்சிகள் 2026 ஆகஸ்ட் 8 வரை கட்டாயம், விலை உயர்வுகளைத் தவிர்க்க வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
  • ATM இயந்திரங்கள் ஜனவரி 1 முதல் யூரோ மட்டுமே வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டன.

அதிகாரப்பூர்வ மாற்று விகிதம் 1 யூரோ = 1.95583 லெவ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது — இது பல ஆண்டுகளாக பல்கேரியாவின் நாணய வாரியம் மூலம் நிலைநிறுத்தப்பட்ட விகிதமே.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் முக்கியமான முன்னேற்றம்

ECB தலைவர் கிறிஸ்டின் லகார்ட், பல்கேரியாவை “யூரோ குடும்பத்தின் புதிய உறுப்பினர்” என வரவேற்று, இந்த நாணயம் “ஐரோப்பா ஒன்றிணைந்து செயல்படும் போது எதை சாதிக்க முடியும் என்பதற்கான வலுவான சின்னம்” என்று குறிப்பிட்டார்.

பிராங்க்பர்டில் உள்ள ECB தலைமையகம் சிறப்பு ஒளியமைப்புகளுடன் இந்த நிகழ்வை கொண்டாடியது. பல்கேரிய தேசிய வங்கி இப்போது யூரோசிஸ்டத்தின் ஒரு பகுதியாக ECB நிர்வாகக் குழுவில் இடம் பெறுகிறது மற்றும் ஐரோப்பிய வங்கி கண்காணிப்பு அமைப்பில் முழுமையாக இணைகிறது.

பிராந்திய அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் சூழலில், இந்த மாற்றம் பல்கேரியாவின் மேற்கத்திய நிறுவனங்களுடன் உள்ள உறவை வலுப்படுத்தும் ஒரு மூலோபாயச் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் கலவையான எதிர்வினை மற்றும் அரசியல் பதற்றம்

இந்த வரலாற்றுச் சம்பவத்திற்குப் பின்னாலும், பல்கேரியாவில் பொதுமக்களின் கருத்து பிளவுபட்டுள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்புகள், மக்கள் சுமார் பாதி யூரோ மாற்றத்துக்கு எதிராக இருப்பதைக் காட்டுகின்றன. விலை உயர்வு, தேசிய அடையாள இழப்பு, மற்றும் பொதுமக்களிடம் போதிய ஆலோசனை இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

ஜனாதிபதி ரூமென் ரதேவ், இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும், மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாததை விமர்சித்து, இது “அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஆழமான பிளவின் அறிகுறி” எனக் கூறினார்.

2021 முதல் ஏழு நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்த பல்கேரியா, அரசியல் நிலையற்ற சூழலில் உள்ளது. 2026 பட்ஜெட்டைச் சுற்றியுள்ள போராட்டங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் காரணமாக, பிரதமர் ரோசென் ஜெல்யாஸ்கோவ் டிசம்பரில் ராஜினாமா செய்தது மாற்றக் காலத்தை மேலும் சிக்கலாக்கியது.

சந்தை எதிர்பார்ப்புகள் மற்றும் வணிகத் துறையின் தயாரிப்பு

சில்லறை வணிகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல மாதங்களாக இந்த மாற்றத்திற்குத் தயாராகி வந்தன. பெரிய வணிக சங்கிலிகள் முதல் சிறிய கடைகள் வரை, அனைத்து கட்டண அமைப்புகளும் புதுப்பிக்கப்பட்டன. வங்கிகள், மாற்றத்தின் முதல் சில மணி நேரங்களில் ATM மற்றும் கார்டு பரிவர்த்தனைகளில் சிறிய தாமதங்கள் ஏற்படலாம் என எச்சரித்தன.

அதிகாரிகள், யூரோவின் அறிமுகம் சந்தையை நிலைநிறுத்தும், பரிவர்த்தனைச் செலவுகளை குறைக்கும், மற்றும் வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என நம்புகின்றனர்.

ஐரோப்பிய திட்டத்தில் பல்கேரியாவின் புதிய அத்தியாயம்

பல்கேரியா இணைந்ததன் மூலம், இன்னும் ஆறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் — ஸ்வீடன், போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி, ருமேனியா, மற்றும் டென்மார்க் — யூரோ மண்டலத்திற்கு வெளியே உள்ளன.

ஆதரவாளர்களுக்கு, யூரோ பொருளாதார பாதுகாப்பு, எளிதான வர்த்தகம், மற்றும் ஐரோப்பாவின் முன்னணி பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை குறிக்கிறது. விமர்சகர்களுக்கு, இது விலை உயர்வு மற்றும் தேசிய சுயாட்சியின் குறைவு பற்றிய அச்சங்களை எழுப்புகிறது.

எதுவாக இருந்தாலும், யூரோவை ஏற்றுக்கொண்டது பல்கேரியாவின் ஐரோப்பிய பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாகும் — இது நாட்டின் நிதி அமைப்பை மறுவடிவமைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய அமைப்புகளில் அதன் இடத்தை உறுதிப்படுத்துகிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

அலறும் திராவிட கூடாரம் ! நாளை மறுநாள் சிறப்பான சம்பவம் இருக்கு ?

by Amizhthu 2 January 2026
written by Amizhthu

எல்லோரும் பெரியாரை போற்றுவோம் !

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
2 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

”தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது.” – தர்மேந்திர பிரதான்.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி:

ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதல்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

‘திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்’ என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது.

ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள்.

அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. – இவ்வாறு அவர் கூறினார்.

பின், திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆறுதல் கூறினார். அப்போது குடும்பத்தினர், உதவி கேட்டு அமைச்சரிடம் மனு அளித்தனர்.

நிதியை முதல்ல விடுவிங்க. தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. இதைத்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரையில் தன் கருத்தாக வெளிப்படுத்தி உள்ளார். முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க. கனிமொழி, எம்.பி., – தி.மு.க.,

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.110 அதிகரித்து, ஒரு சிலிண்டர் ரூ.1,849.50க்கு விற்கப்படுகிறது.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் இன்று (ஜனவரி 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.110 அதிகரித்து , ஒரு சிலிண்டர் ரூ.1,849.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப் 01 ம் தேதி ரூ.51.50, ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.33.50, ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. கடந்த அக்டோபர் 1ம் தேதி ரூ.16 உயர்ந்தது. நவம்பர் 1ம் தேதி ரூ.4.50 குறைந்தது. டிசம்பர் 1ம் தேதி ரூ.10.50 குறைந்தது. இந்த சூழலில் இன்று ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்து இருக்கிறது.

கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே விலையில் வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

உத்தரகண்டின் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் நடைபெறும் நீர்மின் திட்ட கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் இரு ரயில்கள் மோதிய விபத்தில், 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தின் பிபல்கோடி பகுதியில் நீர்மின் திட்டம் கட்டுமானப்பணி நடக்கிறது. இதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் துளையிடும் இயந்திரம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு, 109 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லோகோ ரயில் சென்றது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ரயில் எதிரே வந்த ரயில் மீது மோதியது. இதில், 88 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களில், 70 பேர் கோபேஸ்வர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மீதமுள்ள நான்கு பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை சமோலி கலெக்டர் கவுரவ் குமார் மற்றும் போலீஸ் எஸ்.பி., சுர்ஜித் சிங் பன்வார் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே ரயில் விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பயணியர் ரயில்களில் பயன்படுத்தும் பெட்டிகள் அல்ல; கட்டுமானத்துக்காக தனியார் இயக்கும் டிராலி வகை பெட்டிகள் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில்; “தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.” என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில், தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ‘வாட்ஸாப், டெலிகிராம்’ போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம், புத்தாண்டு வாழ்த்து செய்திகள் பகிரப்படுகின்றன. இதை பயன்படுத்தி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

வாட்ஸாப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில், தெரியாத எண்களில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்; குறுஞ்செய்திகளையும் பார்க்க வேண்டாம்.

அந்த செய்தியில், ‘உங்களுக்கான புத்தாண்டு பரிசு இங்கே, உங்கள் பெயரைப் போட்டு வாழ்த்து அட்டையை உருவாக்குங்கள்’ போன்ற வாசகங்களுடன் ஒரு லிங்க் இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்தவுடன், அது ஒரு போலி இணையதளத்திற்கு சென்று, மோசடி செயலியை தானாகவே பதிவிறக்கம் செய்யும். இதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்திய தபால் துறை இன்று முதல் “வெளிநாடுகளுக்கு சிறிய பார்சல்களை அனுப்புவது” உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

இது குறித்து மத்திய அரசின் அஞ்சல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கை:

சிறிய கவர்களில் வைத்து பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சிறு பார்சல் சேவை, ஜன.1 முதல் நிறுத்தப்படுகிறது. சர்வதேச போஸ்டல் யூனியன் சில விதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மட்டுமே இனி சிறிய கவர்களில் வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.

பார்வை திறனற்றோருக்கான அஞ்சல் சேவை களில் மாற்றம் ஏதுமில்லை. கவர்களில் பொருட்களை வைத்து, தரை, கடல், வான்வழி அஞ்சல் சேவையாக பட்டுவாடா செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

இம்முறையில் அனுப்பப்படும் பார்சல்களை, ‘டிராக்’ சேவை எனப்படும், பார்சல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாது என்பதுடன் பட்டுவாடா செய்வதற்கும் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி இனி, ஏதேனும் பொருட்கள், ஏற்றுமதி சரக்குகளை அனுப்பவதாக இருந்தால் ஐ.டி.பி.எஸ்., எனப்படும், டிராக் செய்யும் சேவை வழியாக அனுப்பலாம்.

இதில் அனுப்பப்படும் பார்சல்கள் பயணிக்கும் வழியெங்கும் ‘டிராக்’ செய்ய முடியும். சுங்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பூர்த்தி செய்யும் இந்த சேவையில் பார்சல்களும் விரைவாக சென்றடையும்.

இது, ஏற்றுமதியாளர்களுக்கும் ‘இ-காமர்ஸ்’ விற்பனையாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

இம்மாற்றம் குறித்து அஞ்சல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் புதிய நடைமுறைகளுக்கு மாற அவர்கள் உதவுவர். -இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் அர்ஜுன் எரிகைசி வெண்கலம் வென்றார்.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

முதலில் ‘ரேபிட்’ பிரிவு போட்டிகள் நடந்தன. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38, வெண்கலம் கைப்பற்றினர்.

அடுத்து, ‘பிளிட்ஸ்’ முறையில் (அதிவேகம்) போட்டிகள் நடந்தன. மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.

இதில் அர்ஜுன், நாடிர்பெக்கிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பேபியானோவை, கார்ல்சன் (3-1) வென்றார். பைனலில் அசத்திய கார்ல்சன் 2.5-1.5 என நாடிர்பெக்கை சாய்த்தார். ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ என இரு பிரிவிலும் 9 வது முறையாக சாம்பியன் ஆனார். அர்ஜுன், பேபியானோவுக்கு வெண்கலம் கிடைத்தது.

இரண்டாவது இந்தியர் உலக ‘பிளிட்ஸ்’ தொடரில் ஆனந்த், வைஷாலிக்குப் பின் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன்.

* ஆனந்துக்குப் பின், உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ என இரு பிரிவிலும் பதக்கம் வென்றார் அர்ஜுன்.

* உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ என ஒரு தொடரின் இரு பிரிவிலும் பதக்கம் வென்ற 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.

இந்திய பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில், ‘ செஸ் அரங்கில் இந்தியாவின் வெற்றிகள் தொடர்கின்றன. உலக ‘ரேபிட்’ சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து, ‘பிளிட்ஸ்’ தொடரிலும் வெண்கலம் வென்ற அர்ஜுனுக்கு வாழ்த்துகள். அவரது திறமை, பொறுமை, ஆர்வம் என அனைத்தும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக உள்ளன. அர்ஜுனின் வெற்றிகள், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகம் தரும்,’ என தெரிவித்துள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை ஜனாதிபதியின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள்

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும்.

இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.இலங்கை சுற்றுலா

அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

வாரிசு சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்; வருவாய் ஆய்வாளருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை.

by Amizhthu 1 January 2026
written by Amizhthu

வாரிசு சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், வருவாய் ஆய்வாளருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 60. இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அங்கு பணியில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஹரிஹரன், 43, என்பவர், சான்றிதழ் வழங்க லஞ்சமாக, 30,000 ரூபாய் கேட்டுள்ளார். பின், லஞ்ச பணத்தை, 25 ஆயிரம் ரூபாயாக குறைத்து கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணவேணி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்சப் பணத்தை பெற்ற ஹரிஹரனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின், ஹரிஹரன், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஹரிஹரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு ஊழியரான அவர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறைகேடான வழியில் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில், அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

மேலும், கடமையை செய்ய லஞ்சம் கோரும் குற்றச்சாட்டில், மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
1 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d