பிரித்தானிய செய்திகள்

தொடர்புகளுக்கு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamil Co-ordinating Committee UK
தொலைபேசி : 020 3371 9313
மின்னஞ்சல் : tccukinfo@gmail.com
பிரித்தானிய செய்திகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamil Co-ordinating Committee UK
தொலைபேசி : 020 3371 9313
மின்னஞ்சல் : tccukinfo@gmail.com
லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது, தென்மேற்கு இலண்டன் பகுதியில் உள்ள Mitcham
எனும் இடத்தில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (05/10/2025) மாலை 6 மணி அளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

நிகழ்வில் பொதுச் சுடரினை நடன ஆசிரியை சுகி ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை லெப்ரினன் கேணல் புலேந்திரன் அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை நடன ஆசியை சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அகவணக்கத்தினை தொடர்ந்து, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை திருமதி றயனி மற்றும் திருமதி சுபாசினி அவர்கள் அணிவித்திருந்தார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.
தேசியக்கொடி கையேந்தலுடன் , மாவீரர்களின் கனவு நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.










ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தொடர் போராட்டங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால், அத்தகைய போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது போர் துவங்கியது முதல், பிரிட்டனில் பாலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக நடந்தாலும், இதில் சிலர் யூத விரோத கோஷங்களை எழுப்புகின்றனர். மேலும், பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சில போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பினர் பிரிட்டிஷ் ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை குறிவைத்து சேதப்படுத்தினர். எனவே இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அமைப்புக்கு ஆதரவாக லண்டனின் டிராபால்கர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அவர்களில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற போராட்டங்கள் தொடர்வதால் அவற்றை கட்டுப்படுத்த புதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறையின்படி, ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால், போலீசார் கடும் நிபந்தனைகளை விதிக்கலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
சில நாட்களுக்கு முன் மான்செஸ்டரில் யூத வழிபாட்டுத்தலத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது.
The Tamil Youth Organisation (TYO) successfully hosted the Tamil Youth Conference 2025 in London on Saturday, 27th September, marking yet another powerful gathering of unity, purpose, and resilience. This year’s event brought together over 100 Eelam Tamil youth from across nine European countries.


On September 27th, 2025, the Tamil Youth Conference took place in London, bringing together Tamil youth from across Europe. This event featured inspiring talks, interactive workshops, and valuable networking opportunities, all designed to empower young Tamils in their personal and professional development.
With contributions from renowned speakers and successful professionals, the conference served as a powerful source of motivation and inspiration. The cultural exchange and strong sense of community made the event truly special.













தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி, விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம்
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 வது ஆண்டு, மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணி சிறப்பு தளபதி கேணல் ராயு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்.

நிகழ்வின் பொதுச் சுடரினை ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூட தலைமை ஆசிரியர் திருமதி சுஜீவா ரவிசங்கர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக் கொடியினை தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்றுக் கொண்ட உணர்வாளர் செல்வி வைஷ்ணவி ரகுபதி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை 06/10/1997 ல் பெரியமடுவில் சிறீலங்கா படைகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த பசுபதிப்பிள்ளை உதய குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட லெப்டினல் கேணல் அல்லது கோபி அல்லது திருப்புகழ் அவர்களின் சகோதரியும் 23/03/1999 ல் சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் வீரச்சாவடைந்த இராசதுரை சபேசன் என்கின்ற இயற்பெயர் கொண்ட லெப்டினன் மதினன் அவர்களின் மைத்தினியுமான திருமதி வனிதா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினை தொடர்ந்து ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூட ஆசிரியர்களான திருமதி யசிந்தா ஐங்கரன் , திருமதி டயானி ரகுபதி ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்கள்.
தியாக தீபம் திலீபன் மற்றும் தளபதிகளின் திருவுருவப்படங்களுக்கு பொதுமக்கள் மலர் வணக்கம் மற்றும்தீப வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து செல்வன் துஷாந்த் ரவிசங்கர் , செல்வன் ஆதவன் தயாளபவன் ,செல்வி . தேனுகா தயாசீலன் மற்றும் திருமதி செல்வம் பரமேஷ்வரி ஆகியோர் எழுச்சி கவிதைகள் வழங்கினார்கள்.
ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூடம் சார்பாக , திருமதி டயானி ரகுபதி அவர்களின் நெறியாகையில் தமிழினி பிரதீபன் ,சனோஜா கலைச்செல்வன், சாம்பவி ரகுபதி ,வைஷாணா நவநீதன் மற்றும் தமிழ் தேசிய கல்வி கூட மாணவர்கள் சைந்தவி தயாளபவன், ரிபாணி திருக்குமார்,அர்ச்சனா அந்தோணி பிள்ளை ஆகியோரின் நடனம் இடம் பெற்றது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்கின்ற பாடலை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடி கையேந்தப்பட்டு நிகழ்வானது நிறைவு பெற்றது.






லெப்டினன் கேணல் புலேந்திரன் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – பிரிட்டன்
நெஞ்சமதில் எம்மைச் சுமந்தவர் கழுத்ததில் சுமந்தனர் நஞ்சு மாலையை தமிழீழமே தாகமென கொள்கையை வரித்தவர் அஞ்சாத புலி மறவர் நஞ்சுண்டு மண்ணோடு
விதையாகிச் சரிந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
✧. அறிமுகம்
சமீப வாரங்களில், ஐக்கிய இராச்சியம் (UK) பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்களுக்கு Indefinite Leave to Remain (ILR) வழங்குவதைத் தடை செய்துவிட்டது என்ற பரபரப்பான தலைப்புகள் இணையத்தில் பரவலாகக் கூறப்பட்டன. பல வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள், இந்த முடிவு இறுதியானது என்றும், இந்நாடுகளின் குடிமக்கள் இனி UK-வில் நிரந்தரமாக குடியேறும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்றும் வலியுறுத்துகின்றன. ஆனால் உண்மையான நிலைமை மிகவும் சிக்கலானது. இந்தக் கட்டுரை உண்மை நிலையை, அரசியல் சூழலை, மற்றும் தற்போதைய சட்ட நிலையை ஆதாரபூர்வமாக விளக்குகிறது.

✦. தலைப்புகள் கூறுவது
• UK முழுமையாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்களுக்கு ILR தடை விதித்துள்ளது.
• Home Office இந்நாடுகளின் குடிமக்களுக்கு settlement வழங்குவதை நிறுத்தியுள்ளது.
• இது UK குடியேற்றக் கனவின் முடிவு என்று பரவலாகக் கூறப்படுகிறது.
இத்தகைய தலைப்புகள் கவனத்தை ஈர்த்தாலும், அவை கொள்கை மாற்றங்களின் உண்மையை மிகைப்படுத்தி வளைத்துக் காட்டுகின்றன.
✦. தற்போதைய சட்ட நிலை
அதிகாரப்பூர்வமான முழுத் தடையில்லை
செப்டம்பர் 2025 நிலவரப்படி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்கள் ILR-க்கு விண்ணப்பிக்க சட்டபூர்வமான முழுத் தடை எதுவும் இல்லை. gov.uk தளத்தில் வெளியிடப்பட்டுள்ள UK Home Office குடியேற்ற விதிகளின்படி, அனைத்து நாடுகளின் குடிமக்களும் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ILR-க்கு விண்ணப்பிக்கலாம்.
குடியேற்ற வெள்ளைக் காகிதம் (மே 2025)
2025 மே மாதம், UK அரசு குடியேற்றச் சீர்திருத்த வெள்ளைக் காகிதத்தை வெளியிட்டது. முக்கிய பரிந்துரைகள்:
• சில விசா வகைகளில் ILR பெற குறைந்தபட்ச கால அவகாசத்தை 5 ஆண்டிலிருந்து நீட்டித்தல்.
• நிதி, ஆங்கில அறிவு, மற்றும் ஒருங்கிணைப்பு நிபந்தனைகளை கடுமையாக்கல்.
• அதிகப்படியான overstay அல்லது asylum ஆபத்து கொண்ட நாடுகளுக்கான சோதனைகளை கடுமையாக்கல்.
இந்த விவாதங்களில் பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா ஆகியவை அடிக்கடி குறிப்பிடப்பட்டன. இது தடை அல்ல, ஆனால் கூடுதல் சோதனை மற்றும் நீண்டகால settlement பாதையை குறிக்கிறது.
அரசியல் பேச்சுகள் மற்றும் பரிந்துரைகள்
• Reform UK மற்றும் பிற கட்சிகள், ILR முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக புதுப்பிக்கக்கூடிய நீண்டகால விசாக்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளன. இது இன்னும் அரசியல் விவாதம் மட்டுமே; சட்டமாக்கப்படவில்லை.
• Home Secretary சில நாடுகள் தங்களின் asylum நிராகரிக்கப்பட்ட குடிமக்களை திரும்பப் பெற மறுத்தால், அந்த நாடுகளுக்கான விசாக்கள் நிறுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார். இது பாகிஸ்தான் மற்றும் இலங்கையைப் பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், இதுவரை சட்டரீதியாக அமல்படுத்தப்படவில்லை.
ILR விண்ணப்பங்களின் தற்போதைய நிலை
• பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்கள் இன்னும் ILR-க்கு விண்ணப்பிக்க முடியும் (Skilled Worker, Family Reunion, Long Residence, Refugee Settlement போன்ற வகைகளில்).
• விண்ணப்பங்கள் கடுமையான சோதனைக்கும் தாமதங்களுக்கும் உள்ளாகலாம்.
• அரசு பரிந்துரைகளை 2025 இறுதி அல்லது 2026-ல் சட்டமாக்கினால் விதிகள் மாறக்கூடும்.
✦.ஏன் குழப்பம்?
• YouTube மற்றும் ஊடக தலைப்புகள் கிளிக்குகளைப் பெற கொள்கை பரிந்துரைகளை மிகைப்படுத்துகின்றன.
• அரசியல் அறிவிப்புகள் உடனடியாக சட்டமாக மாறியதாகக் கூறப்படுகின்றன.
• வெள்ளைக் காகிதங்கள் மற்றும் விவாதங்கள் அரசின் திசையைச் சுட்டிக்காட்டினாலும், உடனடி சட்ட மாற்றம் அல்ல.
✦. பரிந்துரைகள் சட்டமாகினால் ஏற்படும் விளைவுகள்
• ILR க்கு நீண்டகால காத்திருப்பு (5 ஆண்டிற்கு பதிலாக 7–10 ஆண்டுகள் வரை).
• தகுதி சோதனைகள் கடுமையாகும், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்களுக்கு.
• நிராகரிப்புகள் அதிகரிக்கலாம் (overstay, நிதி நிபந்தனைகள், ஆங்கில அறிவு குறைவு போன்ற காரணங்களால்).
• குடும்பங்களுக்கு uncertainty, ஏனெனில் அவர்கள் நடுவே விசா வைத்திருந்தாலும் settlement பாதைகள் மாறக்கூடும்.
✦. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழிகள்
• புதுப்பிக்கக்கூடிய வேலை விசாக்கள்: ILR கடினமானாலும், திறமை வாய்ந்த வேலை விசாக்கள் நீண்டகால தங்குதவையை வழங்கலாம்.
• நீண்டகால குடியிருப்பு வழி: ILR சாத்தியமில்லாவிட்டாலும், நீண்டகால குடியிருப்பு அடிப்படையில் குடியுரிமை பெறும் வாய்ப்பு இருக்கலாம்.
• மனித உரிமை கோரிக்கைகள்: குடும்பம் அல்லது மனிதாபிமான அடிப்படையில் வலுவான ஆதாரங்கள் உள்ளவர்களுக்கு, Article 8 (குடும்ப/தனியுரிமை உரிமை) அடிப்படையில் முறையீடு செய்ய முடியும்.
✦. முடிவுரை:
UK பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்களுக்கு ILR தடை செய்துவிட்டது என்ற கூற்று தவறானதும் அவசரமானதும் ஆகும். தற்போதைய நிலையில், இந்நாடுகளின் குடிமக்கள் இன்னும் ILR-க்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இருப்பினும், அரசியல் திசை தெளிவாக உள்ளது: settlement கடினமாகி, நீளமாகி, மேலும் கட்டுப்பாடுகளுடன் இருக்கும், குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியாவை மையமாகக் கொண்டு.
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமான Home Office அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்கவும், சமூக ஊடகத் தலைப்புகளை மட்டுமே சாராமல் சட்ட ஆலோசனையைப் பெறவும் வேண்டும். வரும் மாதங்கள் மிக முக்கியமானவை, ஏனெனில் வெள்ளைக் காகிதப் பரிந்துரைகள் சட்டமாக்கப்படலாம்.

எழுதியவர்: ஈழத்து நிலவன்
UK & சர்வதேச கொள்கை ஆய்வாளர் | குடியேற்றம், குடியுரிமை மற்றும் மனித உரிமை நிபுணர்
23/09/2025
இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துகளே தவிர, அவை அமிழ்துவின் தலையங்க நிலைப்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.
✧. Introduction
In recent weeks, sensational headlines have circulated online claiming that the United Kingdom has banned Pakistanis and Sri Lankans from obtaining Indefinite Leave to Remain (ILR). Many videos and articles suggest that this decision is final and that citizens from these countries have lost all prospects of permanently settling in the UK. However, the truth is more complex. This article provides a detailed, evidence-based analysis of what is really happening, the political context, and the current legal situation.

✦. What the Headlines Claim
• The UK has completely banned Pakistanis and Sri Lankans from applying for ILR.
• The Home Office has stopped granting settlement to individuals from these two countries.
• This marks the end of UK migration dreams for Pakistanis and Sri Lankans.
While such headlines attract attention, they oversimplify and distort the actual policy changes.
✦. The Current Legal Situation
No Official Blanket Ban in Force
As of September 2025, there is no blanket legal ban on Pakistanis or Sri Lankans applying for ILR. Official UK Home Office immigration rules, published on gov.uk, remain unchanged in explicitly allowing nationals of all countries to apply for ILR if they meet eligibility requirements.
Immigration White Paper (May 2025)
In May 2025, the UK government released a White Paper on Immigration Reform. Key proposals included:
• Extending the minimum qualifying period for ILR from 5 years to longer periods for some visa routes.
• Increasing the financial, English-language, and integration requirements.
• Introducing stricter checks on nationalities identified with high overstay or asylum risks.
Pakistan, Sri Lanka, and Nigeria were frequently mentioned in discussions on visa overstay monitoring. This does not amount to a ban but suggests increased scrutiny and longer routes to settlement.
Political Rhetoric and Proposals
• Reform UK and other parties have proposed abolishing ILR altogether, replacing it with renewable long-term visas. This is still a political debate, not an enacted law.
• The Home Secretary has also threatened to suspend visas for countries that refuse to take back failed asylum seekers. This measure could potentially affect Pakistan and Sri Lanka but has not yet been legally enforced.
Current Status of ILR Applications
• Pakistani and Sri Lankan nationals can still apply for ILR under existing categories: Skilled Worker, Family Reunion, Long Residence, Refugee Settlement, etc.
• Applications may face stricter scrutiny and delays.
• Rules could change if the government converts proposals into legislation later in 2025 or 2026.
✦. Why the Confusion?
• Sensational YouTube and media headlines exaggerate policy proposals for clicks.
• Political announcements are often reported as immediate legal changes.
• White Papers and debates indicate the government’s direction but do not automatically change the law.
✦. Potential Consequences if Proposals Become Law
• Longer wait times for ILR (possibly 7–10 years instead of 5).
• Tougher eligibility checks, especially for Pakistanis and Sri Lankans.
• Increased refusals on grounds of overstay, financial criteria, or English-language standards.
• Uncertainty for families already in the UK on visas, as settlement pathways may be altered mid-way.
✦. Alternatives for Those Affected
• Renewable Work Visas: Even if ILR becomes harder, skilled work routes may allow extended stays.
• Naturalisation via Longer Residence: If ILR pathways are restricted, long residence visas may remain an alternative.
• Human Rights Claims: For those with strong family or humanitarian grounds, appeals based on Article 8 (right to family/private life) remain possible.
✦. Conclusion:
The claim that the UK has banned Pakistanis and Sri Lankans from ILR is misleading and premature. At present, nationals of these countries are still eligible for ILR under the Immigration Rules. However, the political direction is clear: settlement is becoming harder, longer, and more restrictive, with particular focus on Pakistan, Sri Lanka, and Nigeria.
Those affected should stay updated via official Home Office announcements and seek legal advice rather than relying solely on social media headlines. The coming months will be crucial as White Paper proposals move toward legislation.

Written by Eelaththu Nilavan
UK & International Policy Analyst | Specialist in Immigration, Citizenship, and Human Rights
23/09/2025
The views expressed in this article are the author’s own and do not necessarily reflect Amizhthu’s editorial stance.
திருடர்கள் என்று தவறாக நினைத்து இ-பைக் ஓட்டுநர்கள் ஜோடியைக் கொலை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்ரேயின் சன்பரி-ஆன்-தேம்ஸில் உள்ள ஒரு மோட்டார் பாதை ஸ்லிப் சாலையில் தவறான வழியில் ஓட்டிச் சென்றபோது, 30 வயதான அலெக்ஸ் ரோஸ் தனது கருப்பு நிற பிக்-அப் டிரக்கை வில்லியம் பிர்சார்ட் மற்றும் டேரன் ஜார்ஜ் மீது வேண்டுமென்றே ஓட்டினார்.
தனது வீட்டிற்குள் நுழைய முயன்றதாக சந்தேகித்த ரோஸ், பயணி சார்லஸ் பார்டோவுடன் சேர்ந்து, 60 மைல் வேகத்தில் துரத்தலில் ஈடுபட்டார்.
ஆனால் கில்ட்ஃபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 21 வயதான திரு. பிர்சார்ட் அல்லது 22 வயதான திரு. ஜார்ஜ் ஆகியோர் தங்கள் முகவரிக்கு “அருகில்” இல்லை என்றும், ஆஷ்ஃபோர்டில் உள்ள ஒரு பப்பிற்குச் சென்று கொண்டிருந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
ஜூரிகள் ரோஸ் மற்றும் பார்டோவை இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என்று கண்டறிந்தனர்.
ரோஸுக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 வயதான பார்டோவுக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
ரோஸின் காதலி, 25 வயதான தாரா நாக்ஸ், விசாரணை முழுவதும் அவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், ஒரு குற்றவாளிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்காவது பிரதிவாதியான, அதே மாலையில் தனது சொந்த காரில் அந்தப் பகுதியில் சுற்றி வந்த ரோஸின் மற்றொரு நண்பரான 25 வயதான சாமுவேல் ஆஸ்ப்டன், இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
திரு. பிர்சார்ட் தலையில் காயங்கள், முகம் மற்றும் மண்டை ஓட்டில் எலும்பு முறிவுகள் மற்றும் கடுமையான மூளைக் காயத்தால் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று நீதிமன்றம் விசாரித்தது.
அவரது தந்தை ஒரு அறிக்கையில், “வில்லியம் ஒரு அர்த்தமற்ற குற்றத்திற்கு பலியானவர் மட்டுமல்ல; அவர் எங்கள் அன்பு மகன், ஒரு சகோதரர் மற்றும் பலருக்கு நண்பர்.
“அவரது வாழ்க்கை நம்பிக்கையால் நிறைந்தது, மேலும் அவரது இழப்பு ஒருபோதும் நிரப்ப முடியாத ஒரு இடைவெளியை விட்டுச் சென்றுள்ளது.”
சம்பவத்திற்குப் பிறகு திரு. ஜார்ஜ் மருத்துவமனையில் சிறிது நேரத்திலேயே இறந்தார்.
