Amizhthu.com
www.Amizhthu.com is under maintenance, sorry for the inconvenience.
Home செய்திகள்இலங்கைமுன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு நீதிமன்றில் ஆஜர்.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு நீதிமன்றில் ஆஜர்.

by Amizhthu
0 comments

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29.10.2025) காலை ஆஜராகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்டதையடுத்து, ரணில் விக்ரமசிங்க வழக்கு விசாரணைக்காக தற்போது நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

banner

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00