அஹங்கம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலி

அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதில் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் நீண்ட நேர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!