மொனராகலை மாவட்டத்தின் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் புத்தளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் தராசு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம் பகுதியில் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிகளவிலான ஹெரோயின் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அலைவரிசைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்; இலங்கை ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!
- இலங்கையில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
- “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது” – அண்ணாமலை .
- செம்மணி மனிதப் புதைகுழிகளும் – சிங்கள அரசின் தொடரும் தமிழினப் படுகொலையின் ஆதாரங்களும்
- கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
- பிரிட்டன் அரசு கடும் ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள்: சமூக ஊடகங்கள் மற்றும் AI தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொனராகலை மாவட்ட விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.