இலங்கை நீதி அமைச்சர் தலைமையிலான ஒரு சிறப்புக் குழு, செம்மணி புதைகுழியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை வருகை!

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16.06.2026) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.