அ.தி.மு.க.’வை யாரும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர். அதை மக்க வைத்து விட்டார் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி.

மகாபலிபுரத்தை அடுத்த கூவத்துாரில் நடந்த கூட்டத்தின் வாயிலாக, அவர் எப்படி முதல்வராக ஆக்கப்பட்டார் என்பதை நேரில் இருந்து பார்த்தவன், நான். அதை இப்போது வெளியிடுவது அரசியல் நாகரிகம் அல்ல.
தொடர்ந்தும், பழனிசாமி பச்சையாக பொய் பேசுவாரானால், கூவத்துார் ரகசியங்களை வெளியிடுவேன். செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்க வலியுறுத்தியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார் பழனிசாமி. ஒருங்கிணைக்கச் சொல்வது ஒரு குற்றமா?
முத்துராமலிங்க தேவருக்கு, ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என, 2016ல், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதை ஏற்காத பழனிசாமி, தற்போது, தேர்தலுக்காக அதே கருத்தை இப்போது சொல்கிறார். பழனிசாமி ஆடுவது கபட நாடகம்.
செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதால், கொங்கு பகுதி மக்கள் பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
– கருணாஸ், தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது.
- தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
- எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை – தமிழக பாஜ தலைவர்
- முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- சீமான் இப்படி செய்யலாமா ? | திடீர் தம்பிகளின் வருத்தம் !
- மது விற்பனை தமிழக அரசின் பொறுப்பாக இருக்கக்கூடாது: தமிழக முதல்வருக்கு கமல் வேண்டுகோள்!