சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் 160 பேரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஓர் ஆயுத இயக்கத்தின் எழுச்சியும் அதன் நீண்டநாள் சுவடுகளும்
- என்எடிஏவின் (NDA) தமிழ்நாடு தேர்தல் பிரசாரம் மதுராந்தகத்தில் தொடக்கம்
- ஈரானின் விளிம்புநிலை: உயிர்க்கொல்லி அமைதியின்மை, மறைமுகப் போர் மற்றும் பிராந்திய மோதலின் நிழல்
- மின்னல் மனிதனா GR சுவாமிநாதன்? அயோத்தியா மாறுகிறதா திருப்பரங்குன்றம்?
- கல்லனைப்பகுதிக்கு எமது வாக்குறுதிகள் – முனைவர் செந்தில்நாதன்
- தங்கம்–வெள்ளி விலைகள் புதிய உச்சத்தை எட்டிய நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளுக்கு திரும்புகின்றனர்
பயணிகள் சரியான நேரத்திற்கு தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.