சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் 160 பேரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.
- இலங்கையின் பதுளையில் 165 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, 27 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன.
- ஈத் அல்-பித்ரை முன்னிட்டு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் தற்காலிக அமைதி ஒப்பந்தம்
- மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு நிலம் வழங்க அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு அழித்துவிட்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
- த.வெ.க தலைவர் விஜய்யின் தந்திரமான அரசியல்!
பயணிகள் சரியான நேரத்திற்கு தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.