ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து இணையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் பயணிகள் சேவை முற்றிலும் முடங்கியது.

இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவை வழங்கும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது.
- இலங்கை காவல்துறை நாடு தழுவிய சோதனைகளை நடத்தி, ஒரே நாளில் 570 பேரை கைது செய்தது!
- மத்திய கிழக்கு செய்தி வெளியீட்டை முழுமையாக மறுபரிசீலனை செய்ய பிபிசி முடிவு
- வவுனியாவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடல்
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, கிராமுக்கு ரூ.11,000ஐத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- மீளாத்துயரில் வருந்துகிறோம்!
எனினும் ஜெர்மனியின் முக்கிய விமான நிலையம் ஆன பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. அதேபோல ஜூரிச் விமான நிலையமும் பிரச்சனை இன்றி செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.