33


அகிம்சையின் தீபம் – திலீபன் நினைவு

உண்ணா விரதத்தின் உச்சியில்
உலகம் கண்டது நம் இரத்தத் தீர்மானம்,
பசியின் அரிப்பை மீறி
அகிம்சையின் மேன்மையை எழுதியவர் நீர் திலீபா.
கோடிகளில் தமிழின் இதயம் துடிக்க,
உம் சுவாசம் ஒவ்வொன்றும் போரின் அழைப்பாய் மாறியது.
வாளால் அல்ல, வாக்கால் அல்ல –
உம் அமைதியே எங்கள் ஆயுதமாயிற்று.
விடுதலைக்கான பாதையில்
உம் ஒளி எரிகின்றது இன்று,
இளைஞன் மனதில் தீப்பொறி ஏற்றி
நீங்கள் விதைத்த விதை செழிக்கின்றது.
எங்கள் வீடுகளில் ஏற்றும் தீபம்
உம் உயிரின் மறுவடிவம்,
நீதிக்கான போராட்டம் அழியாது,
அது எங்கள் நெஞ்சில் நிலைக்கின்ற சத்தியம்.
You Might Be Interested In
- தமிழக அரசியலின் மறுசீரமைப்பு 𝟮𝟬𝟮𝟲 — 𝟮𝟬𝟯𝟭 சீமான் • நாம் தமிழர் கட்சி (NTK) • விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK)
- அகவை வாழ்த்து – டிசம்பர் 26
- ரவிகரன் எம்.பி அணை கட்டுமானம் மற்றும் கால்வாய் புனரமைப்பு குறித்து ஆய்வு செய்தார்.
- சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல்
- வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
- மேஜர் சுலக்சனா (கயல்விழி) 01.02.1998
திலீபா! உம் பெயர்
வரலாற்றின் பொற்கோட்டையில் செதுக்கப்பட்டு,
எதிர்காலத் தலைமுறைகள் உம் சிந்தனையோடு
விடுதலைக்கான நடைபோடும்.

எழுதியவர்: ஈழத்து நிலவன்
“தமிழின் தீயாய் எரியும் வரலாற்றின் சாட்சி”
You Might Be Interested In