பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 42 படகுகளில், சுமார் 500 செயற்பாட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் படகுகள், பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். அவர்கள் அனைவரையும் இஸ்ரேலியப் படையினர் சிறைப்பிடித்தனர்.
பல ஆர்வலர்கள், இஸ்ரேல் படைகளால் தடுப்புக் காவலில் கொடுமை படுத்தப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கிரெட்டாவை இஸ்ரேலியப் படைகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்தமிடுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பொய்க் குற்றச்சாட்டு என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 171 ஆர்வலர்கள் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
- இங்கிலாந்தில் 80-க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள்: தொடரும் கனமழை கவலை அதிகரிக்கிறது
- மனித மூளையின் திசை உணர்வு முறையை விளக்கும் புதிய கண்டுபிடிப்பு: ஜெர்மன் நரம்பியல் ஆய்வாளரின் முக்கிய முன்னேற்றம்
- தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல் 2025 – பிரான்சு
- பிராந்தியப் போர் வெடிப்பு: ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணிகள் பல முனைப் மோதலில்
- பிரிட்டனில் இருந்து பயணம் செய்யும் பலர் இன்னும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்: ‘10 ஆண்டு பாஸ்போர்ட் விதி’ குழப்பம் தொடர்கிறது
- சிரியாவில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்திருப்பது ‘மத்திய கிழக்கில் அமைதிக்காக’ அவசியம் என டிரம்ப் விளக்கம்