ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கு எதிரான, மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்று இந்தியா குற்றம்சாட்டியது.

இந் நிலையில்,ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது. இந்த விவரத்தை நியுயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஐ.நா.வில் 2026-28ம் ஆண்டு காலத்திற்கான மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா 7வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஆதரவை அளித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி.
இந்த தேர்வு மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களுக்காக இந்தியா அளித்து வரும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பதவி காலத்தில் இதே நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். – இவ்வாறு ஹரிஷ் தமது பதிவில் கூறி உள்ளார்.
- அமெரிக்காவின் அதிக வரிகளையும் மீறி இந்தியாவின் ஏற்றுமதி 20% உயர்வு — வர்த்தகத் தாங்குதன்மை குறித்து புதிய கேள்விகள்
- மேற்கு ஆசிய மோதலின் நடுவில் சிக்கிய 500-க்கும் மேற்பட்ட ஆந்திர வாசிகள் பாதுகாப்பாக வீடு திரும்பினர்
- “இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது” என்கிறார் ஆந்திரா முதல்வர்!
- பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
- ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பட்டாசு புகையால் தில்லி திணறுகிறது!