ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கு எதிரான, மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்று இந்தியா குற்றம்சாட்டியது.

இந் நிலையில்,ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது. இந்த விவரத்தை நியுயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஐ.நா.வில் 2026-28ம் ஆண்டு காலத்திற்கான மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா 7வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஆதரவை அளித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி.
இந்த தேர்வு மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களுக்காக இந்தியா அளித்து வரும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பதவி காலத்தில் இதே நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். – இவ்வாறு ஹரிஷ் தமது பதிவில் கூறி உள்ளார்.
- ‘சக்தி’ என்று பெயரிடப்பட்ட முதல் புயல், அக்டோபர் 7 வரை நீடிக்கும் கனமழையை மும்பையில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- “வாட்ஸ்அப்” உரையாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து வழங்க முடியாது – மும்பை உயர் நீதிமன்றம்.
- இந்திய மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் “கிரிப்டோகரன்சி, வாகனங்கள், துப்பாக்கிகள்” இடம்பெற்றுள்ளன.
- கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 13 நாட்களுக்கு பிறகு கூம்பன்பாறை வழியாக மூணாறுக்கு போக்கு வரத்து துவங்கியது.
- உலகம் முழுவதும் ‘X’ செயலிழப்பு: பதிவுகள், நேர்காணல்கள், டைம்லைன் ஏற்றுதல் பாதிப்பு
- பெங்களூருவின் 369 வார்டுகளுக்கான ஒதுக்கீட்டு அறிவிப்பு வெளியீடு: புதிய மாநகராட்சிகளில் ஒதுக்கீட்டு சீர்மையைக் குறித்து கேள்விகள் தொடர்கின்றன