சென்னையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 14) ஆபரண தங்கம் கிராம் 11,825 ரூபாய்க்கும், சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 15) தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
- ‘திராவிட மாடல்’ அரசின் உயர்கல்வித் தனியார்மயமாக்கல்: மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) நிழலா?
- பசும்பொன் தேவரும் சீமானும் ஒன்றுதான்!
- தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட ‘256 அறிவிப்புகள் சாத்தியமில்லை.’ – என்பதால் கைவிட முடிவு!
- தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28 ஆம் தேதி மதுரைக்கு வர உள்ளார்.
- த.வெ.க தலைவர் விஜய்யின் தந்திரமான அரசியல்!
- பெருங்களத்தூரில் சாலை அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் சாலையைத் தோண்டி மின்சார வாரியம் ஒரு அட்டூழியத்தைச் செய்கிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.