மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 2023ல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68,527 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- பிரித்தானியாவின் அரசியல் நிலநடுக்கம் கீயர் ஸ்டார்மர், தொழிற்கட்சியின் வீழ்ச்சி மற்றும் சிதைவடையும் ஐக்கிய இராச்சியம்: ஒரு புதிய அரசியல் யுகத்திற்குள் நுழையும் தேசம்
- IRAN’S WARNING GOES GLOBAL: “STRIKE ANY PART OF US…” — THE WORLD BRACES FOR A MULTI-FRONT CONFRONTATION
- வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் ரத்து — பல போட்டிகள் கால அட்டவணையில் மாற்றம்
- பாரன் டிரம்ப் குறித்து மீண்டும் எழும் இணைய ஊகங்கள் தனிப்பட்ட வாழ்வை நோக்கி கவனம் திருப்புகின்றன
- எங்கள் தலைவருக்கு 71வது பிறந்தநாள் வாழ்த்துகள். மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
- கென்யா குடிமக்கள் உக்ரைன் போருக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படமாட்டார்கள் என கென்யா–ரஷ்யா உறுதி
தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க தொடங்கி இருக்கிறது.