
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் வியாழக்கிழமை (13.11.2025) காலை ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 27 இல் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று தமிழர்களின் விடிவிற்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு வருகின்றார்கள்.
- இங்கிலாந்து அவசர சிகிச்சை பிரிவுகளில் நெரிசல் அதிகரிப்பு; வழித்தடங்களில் நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்: “கல்ஃப் நாடுகளுக்கு எதிரான ஈரானின் ‘கடுமையான தாக்குதல்கள்’ உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”
- தமிழக மாவட்டங்களில் விவசாயம், ரயில் பராமரிப்பு, சாதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் குடிமை சவால்கள் தொடர்ச்சி
- அகவை வாழ்த்து – டிசம்பர் 29
- கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாதுகாப்பு, குடிமை மேலாண்மை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தநிலையில், மணலாறு மாவீரர் துயிலும் இல்லம், களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் ஆ பகுதி மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் , ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம் போன்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.






