20
கொக்குவில் – கலட்டி பகுதியில் வைத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கை வானிலை அறிக்கை
- இலங்கை நாடாளுமன்றத்தின் தலைமைப் பணியாளர் மற்றும் நாடாளுமன்ற துணைச் செயலாளர் உடனடியாகப் பணிநீக்கம்
- தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் சில பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இலங்கையில் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் விநியோகிக்கப் படவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
- லண்டன்-கொழும்பு நேரடி விமான சேவை அக்டோபரில் மீண்டும் தொடங்குகிறது – பிரிட்டிஷ் ஏர்வேஸ்
You Might Be Interested In