இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸின் தென் ஆப்ரிக்க அணி, 489 ரன்கள் சேர்த்தது.

அதனையடுத்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் தென் ஆப்ரிக்க அணியின் புவுலர்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்ரிக்க பவுலர் மார்கோ ஜேன்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, 288 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
3வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 2வது இன்னிங்ஸில் 26 ரன்கள் சேர்த்து, 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகை – 70 அடி சிலை திறப்பு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்
- அமெரிக்கா-ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!
- பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
- வெனிசுலாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்: இந்திய மத்திய அரசு அறிவுறுத்துகிறது
- இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 2047க்குள் 400க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள்: இந்தியாவை உலக விமான மையமாக மாற்றும் பசுமை எரிபொருள் இலக்கை பிரதமர் மோடி அறிவிப்பு