“இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது” என இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. எரிசக்தியைப் பொறுத்தவரை, அமெரிக்கா இறக்குமதியாளராக இருந்து தற்போது ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. அமெரிக்காவும், சீனாவும் உலகின் விதிகளை மாற்றியுள்ளன. அமெரிக்கா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

உலகம் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா அமைதியாக இருக்காது. இந்தியா இப்போது தனது பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.இப்போது உலகில் நமது செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2014க்கு முன்பு, அத்தகைய சிந்தனை இல்லை. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை எங்களது நோக்கம். இதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
தொழில்துறையில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
- டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், டெயில்பைப்பில் தீப்பிடித்ததால், திரும்ப வேண்டிய கட்டாயம்!
- இந்திய ரூபாய் சரித்திர குறைந்த நிலைக்கு சரிவு
- பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்க உள்ளார்.
- மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடந்து வரும் தேடுதல் நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- பெங்களூருவின் 369 வார்டுகளுக்கான ஒதுக்கீட்டு அறிவிப்பு வெளியீடு: புதிய மாநகராட்சிகளில் ஒதுக்கீட்டு சீர்மையைக் குறித்து கேள்விகள் தொடர்கின்றன
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.