இந்தப் போட்டியிலும் இந்திய அணி டாஸ் ஜெயிக்காததால், தொடர்ந்து 20வது முறையாக டாஸை தோற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்காகு கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கேஷவ் மஹாராஜ் மற்றும் லுங்கி இங்டியும் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் விளையாடும் தென் ஆப்ரிக்கா, இந்திய அணியை வீழ்த்த போராடும். அதேபோல, டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும். எனவே, இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நேற்று (பிப்ரவரி 07 2026) 51 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு சரணடைந்தனர்.
- ஒற்றையர் பிரிவு காலிறுதியில் வைஷ்ணவி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்!
- சபரிமலையில் நேற்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்டது.
- சோனமார்க் சர்பல் பகுதியில் பெரும் பனிச்சரிவு: வீடுகள், வாகனங்கள் பனிக்குள் புதைந்தன
- வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் ரத்து — பல போட்டிகள் கால அட்டவணையில் மாற்றம்