சென்னையில் இன்று (03-12-2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்” இன்று பிரசாரம்.
- “தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில்” – விஜய்
- பெருங்களத்தூரில் சாலை அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் சாலையைத் தோண்டி மின்சார வாரியம் ஒரு அட்டூழியத்தைச் செய்கிறது.
- தமிழக அரசு தேர்வுகளை நம்பி ஒரு லட்சம் பேர் ஏமாற்றப்பட்டனர்; அமலாக்கத் துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
- வட தமிழ்நாடு கடற்கரையில் ஜனவரி 24‑ஆம் தேதி கனமழை வாய்ப்பு
- பாலாறில் கலக்கும் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீரால், வேலுாரில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு