சென்னையில் இன்று (03-12-2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தொங்கு சட்டசபை: தமிழகத்தின் தீர்க்கமான திருப்புமுனை (2026)
- திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, கிராமுக்கு ரூ.11,000ஐத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- கரூர் சம்பவம் – சிபிஐ சம்மன்
- 🔴ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ?
- எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!