டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது.
அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07-12-2025) முதல் தொடங்கியிருக்கின்றனர்.
- மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!
- இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல்: குறைந்தது 31 பேர் பலி
- இலங்கையில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
- யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
- தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்தும் “மாபெரும் தைப்பொங்கல் விழா 2026”
- ஹாண்டா வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!