பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின அழிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதி கோரிக்கையை உலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிச்சம் (Mitcham) பகுதியில் இருந்து தொடங்கி, பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 Downing Street வழியாகச் சென்று தனது அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
பங்கேற்பாளர்கள் அங்கு நின்று அமைதிப் போராட்டம் நடத்தி, பிரசுரங்களை கையளித்திருந்தார்கள் ,பிரித்தானிய அரசாங்கம் தமிழர் நீதிக் கோரிக்கைக்கு உறுதியான ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த இந்தப் பயணம், கடல் மார்க்கம் வழியாக Netherlands உள்ளிட்ட ஐரோப்பிய பகுதிகளை கடந்து, இறுதியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் மையத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
- சர்ச்சைக்குரிய ஆங்கில புத்தக தொகுப்பு தொடர்பில் அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை? – நளின் பண்டார
- தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
- இலங்கை மாகாண சபை தேர்தல்கள்: விஜய ஹெரத் தலைமையில் பாராளுமன்ற சிறப்பு செயற்குழு இன்று கூடுகிறது.
- பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
- போர் விளிம்பில் பிரிட்டன்: கியர் ஸ்டார்மர், உக்ரைன் மற்றும் பரந்த போரின் நிழல்
- ஏஐ மூலம் உயிர் முடிவு தகுதி மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கண்டுபிடிப்பாளரின் கருத்து புதிய விவாதத்தை தூண்டும்