பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின அழிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதி கோரிக்கையை உலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிச்சம் (Mitcham) பகுதியில் இருந்து தொடங்கி, பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 Downing Street வழியாகச் சென்று தனது அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
பங்கேற்பாளர்கள் அங்கு நின்று அமைதிப் போராட்டம் நடத்தி, பிரசுரங்களை கையளித்திருந்தார்கள் ,பிரித்தானிய அரசாங்கம் தமிழர் நீதிக் கோரிக்கைக்கு உறுதியான ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த இந்தப் பயணம், கடல் மார்க்கம் வழியாக Netherlands உள்ளிட்ட ஐரோப்பிய பகுதிகளை கடந்து, இறுதியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் மையத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
- கரிவலம்வந்தநல்லூர் அகழ்வாராய்ச்சியில் சங்க காலக் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
- விகடனும் மொத்த வியாபாரமும் ! | நான் சொன்னது என்ன அவர்கள் எழுதியது என்ன ?
- “தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தத்துவார்த்த நீட்சி: மாவீரர்களின் தியாகமும் மக்களின் தேசிய உறுதிப்பாடும் – ஓர் ஆழமான வரலாற்றுப் பேருரை”
- ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள்
- அரியக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய மினி செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்தனர்.
- மகனை இழந்து துடிக்கும் அகர்வால்! | ஸ்னோலினின், 13- தமிழர்களின் சாபம்! | தர்மம் தண்டித்து விட்டது!