செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த சர்வதேச உச்சிமாநாட்டை புதுடில்லியில் இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தியா சார்பில் ஏஐ உச்சிமாநாடு நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
ஏஐ தொழில்நுட்பம் இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம் உட்பட பல துறைகளை மாற்றியமைத்து வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நமது நாடு ஏஐ தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி நிறுவனங்கள் வரை, ஏஐ துறையில் நமது முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன!
- இந்திய ஒன்றியத்தில் இன்று வெப்பம் அதிகரிப்பு: பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தொடர்ச்சி
- நவீன வசதியுடன் நெல் கொள்முதல்: ஆந்திர விவசாயிகளுக்கு ‘வாட்ஸ்அப்’ வழிகாட்டி
- பெங்களூருவின் 369 வார்டுகளுக்கான ஒதுக்கீட்டு அறிவிப்பு வெளியீடு: புதிய மாநகராட்சிகளில் ஒதுக்கீட்டு சீர்மையைக் குறித்து கேள்விகள் தொடர்கின்றன
- 25 ஆண்டுகள் பழைய கொள்ளை வழக்கின் முதன்மை குற்றவாளியை AI தடம் காட்டி ஆக்ரா போலீஸ் கைது!
- PSLV‑C62 மூன்றாம் கட்ட கோளாறு: இந்தியாவின் விண்வெளி முயற்சிக்கு அரிதான பின்னடைவு, 16 செயற்கைக்கோள்கள் இழப்பு