பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (28-02-2026) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 626 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 29,741 பேர் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 292 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 264 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 68 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த அரசு கடந்த ஆட்சியின் மதவாதப் போக்கைப் பின்பற்றக் கூடாது – சிவஞானம் சிறீதரன் எம்.பி.
- இலங்கை காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்: நாடு தழுவிய சோதனைகள்; ஒரே நாளில் 596’க்கும் மேற்பட்டோர் கைது!
- இலங்கை பிரதமர் 2025’ம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார்.
- இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து கடன்சுமையைக் குறைப்போம். – ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு
- இலங்கைக்கு மீண்டும் ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை
- இலங்கை வரலாற்றில் மிக மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுர இடம்பிடித்துள்ளார் – உதய கம்மன்பில
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,570 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.